/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றத்தில் கும்பாபிஷேக பணிகள்
/
திருப்பரங்குன்றத்தில் கும்பாபிஷேக பணிகள்
ADDED : மார் 26, 2025 03:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகளின் ஒரு பகுதியாக மண்டபங்களில் 'வாட்டர் வாஷ்' பணி நேற்று துவங்கியது.
பிப். 10ல் திருப்பணி துவங்கியது. அதனை அடுத்து பங்குனி திருவிழா துவங்கியதால் கும்பாபிஷேக பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. திருவிழா முடிந்தவுடன் ராஜ கோபுரத்தில் மூங்கில் சாரம் அமைக்கும் பணி துவங்கியது. திருப்பரங்குன்றம் கோயிலுக்கு ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடைபெறும் என நேற்று முன்தினம் சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.