sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கன்னியாகுமரி கோயிலில் கடைகளை அகற்ற உத்தரவு

/

கன்னியாகுமரி கோயிலில் கடைகளை அகற்ற உத்தரவு

கன்னியாகுமரி கோயிலில் கடைகளை அகற்ற உத்தரவு

கன்னியாகுமரி கோயிலில் கடைகளை அகற்ற உத்தரவு


ADDED : செப் 23, 2025 05:36 AM

Google News

ADDED : செப் 23, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் கல் மண்டபத்திலுள்ள கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி நாகராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக 'கன்னியம்பலம்' என்ற பெயரில் பழமையான கல் மண்டபம் உள்ளது. அது நம் முன்னோர்களின் கட்டடக்கலைக்கு சான்றாகும். திருவிழா காலங்களில் வீதி உலாவின்போது பகவதி அம்மன் கல் மண்டபத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

கல் மண்டபத்தின் துாண், தரையை சேதப்படுத்தி கோயில் நிர்வாகம் கடைகள் அமைத்துள்ளது. குப்பைகள் தேங்கியுள்ளன. மண்டபத்திலுள்ள விநாயகர் கோயிலை சரியாக பராமரிக்கவில்லை. குப்பைகள், கடைகளை அகற்ற நடவடிக்கை கோரி அறநிலையத்துறை கமிஷனர், சுசீந்திரம் இணை கமிஷனர், கோயில் மேலாளருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எம்.ராமு ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயில் பகுதியில் வணிக நடவடிக்கை கூடாது. கடைகளை உனடியாக அகற்ற வேண்டும். கமிஷனர், இணை கமிஷனர், கோயில் மேலாளர் அக்.16 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us