sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கின் மேல் முறையீடு விசாரணை இன்றும் தொடர்கிறது

/

'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கின் மேல் முறையீடு விசாரணை இன்றும் தொடர்கிறது

'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கின் மேல் முறையீடு விசாரணை இன்றும் தொடர்கிறது

'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கின் மேல் முறையீடு விசாரணை இன்றும் தொடர்கிறது


ADDED : ஜன 19, 2024 05:24 AM

Google News

ADDED : ஜன 19, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வரும் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் மேல்முறையீடு வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது.

கடந்த 2021ம் ஆண்டில் முதல்வர் பாதுகாப்புக்காக காரில் சென்ற பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீது விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் புகார் அளிக்கச் சென்ற பெண் அதிகாரியின் காரை மறித்த முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து கடந்தாண்டு ஜூன் 16ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதன் மீதான விசாரணையில் அரசு தரப்பும் முன்னாள் எஸ்.பி. தரப்பும் வாதிட்டு முடித்தனர். முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து அவகாசம் கேட்டு வந்தனார்.

மேலும் ராஜேஷ்தாஸ் தரப்பில் வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்ற வேண்டி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 9ம் தேதி விசாரித்த நீதிபதி இவ்வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியாது மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்கவும் விழுப்புரம் கோர்ட்டுக்கு தடை இல்லை எனவும் ஜனவரி 24ம் தேதிக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு மேல்முறையீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறினார்.

அப்போது குறிக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் 'சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதற்கான நோட்டீஸ் ஏதும் எங்களுக்கு வரவில்லை' என்றார்.

இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி பூர்ணிமா சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்காத நிலையில் வழக்கின் விசாரணை இன்று 19ம் தேதி தொடரும் என உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us