ADDED : ஜன 21, 2024 03:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் நகர் போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ., வாசிமலை 51. இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.
நேற்று முன் தினம் இரவு பணி முடிந்து நேற்று காலை வீட்டிற்கு செல்வதற்காக உசிலம்பட்டி - திருமங்கலம் ரோட்டில் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றார்.
சின்ன பொக்கம்பட்டி பிரிவு அருகே நிலைத்தடுமாறி கீழே விழுந்து இறந்தார்.
சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

