sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் முற்றுகை

/

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் முற்றுகை

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் முற்றுகை

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் முற்றுகை


ADDED : மார் 25, 2025 04:51 AM

Google News

ADDED : மார் 25, 2025 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் 27 பேருக்கான பணிமாறுதல் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை ஆர்.டி.ஓ., நிர்வாகத்தின் கீழ் மதுரை மேற்கு, வடக்கு, வாடிப்பட்டி தாலுகாக்கள் உள்ளன. இத்தாலுகாக்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் 27 பேருக்கு மார்ச் 20ல் இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இது வி.ஏ.ஓ.,க்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து நேற்று கலெக்டர் அலுவலகம் வந்த வி.ஏ.ஓ.,க்கள் வளாகத்தில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்றனர். ஆர்.டி.ஓ., ஷாலினியை சந்தித்து இதுபற்றி கேட்டனர். முடிவு எட்டப்படாமல் மாலை வரை பேச்சு வார்த்தை தொடர்ந்தது. இதையடுத்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் ஜெயபாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க தலைவர் சுரேஷ் தலைமையில் வி.ஏ.ஓ.,க்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''வி.ஏ.ஓ.,க்கள் இடமாறுதலுக்கு கவுன்சிலிங் நடத்த அரசாணை உள்ளது. மேலும் மூன்று மாதங்களில் ஜமாபந்தி முடிந்து புதிய பசலி ஆண்டு துவங்க உள்ளது. அதன்பின் இடமாறுதல் வழங்கும் வகையில் கவுன்சிலிங் நடத்த வேண்டும். மேலும் அரசாணை 515ல் ஏ கிராமங்களில் ஓராண்டு பணிமுடித்தோருக்கும், பி கிராமங்களில் 3 ஆண்டுகள் பணிமுடித்தோருக்கும் மாறுதல் வழங்க வேண்டும். அதையும் மீறி செய்வதால் இடமாறுதலை மறுக்கிறோம்'' என்றனர்.






      Dinamalar
      Follow us