/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விஷம் குடித்து மின் பணியாளர் பலி
/
விஷம் குடித்து மின் பணியாளர் பலி
ADDED : செப் 23, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், அந்தியூரை சேர்ந்தவர் சக்திவேல், 55; இன்னும் திருமணமாகவில்லை. பள்ளிப்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். பள்ளிப்பாளையம் அருகே, அம்மன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பள்ளிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.