sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்டத்தில் 8 வட்ட வழங்கல் அலுவலகத்தில் குறைதீர் முகாம்: 197 மனுக்களுக்கு உடனடி தீர்வு

/

மாவட்டத்தில் 8 வட்ட வழங்கல் அலுவலகத்தில் குறைதீர் முகாம்: 197 மனுக்களுக்கு உடனடி தீர்வு

மாவட்டத்தில் 8 வட்ட வழங்கல் அலுவலகத்தில் குறைதீர் முகாம்: 197 மனுக்களுக்கு உடனடி தீர்வு

மாவட்டத்தில் 8 வட்ட வழங்கல் அலுவலகத்தில் குறைதீர் முகாம்: 197 மனுக்களுக்கு உடனடி தீர்வு


ADDED : ஜன 21, 2024 12:56 PM

Google News

ADDED : ஜன 21, 2024 12:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தின் மூலம், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல போன் எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் சேவைகளை, அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குறைகளை நிவர்த்தி செய்யவும், 'மக்கள் குறைதீர் நாள் முகாம்', ஒவ்வொரு மாதமும், இரண்டாவது சனிக்கிழமை, வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடக்கிறது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள, நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் ஆகிய, எட்டு வட்ட வழங்கல் அலுவலகங்களில், அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில், 'மக்கள் குறைதீர் நாள் முகாம்' நேற்று நடந்தது. நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, தாசில்தார் சின்னதம்பி தலைமை வகித்தார். அதில், 33 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

அதேபோல், சேந்தமங்கலம், 24, ராசிபுரம், 31, கொல்லிமலை, 12, திருச்செங்கோடு, 54, குமாரபாளையம், 18, ப.வேலுார், 8, மோகனுார், 17 என, மொத்தம், 197 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.






      Dinamalar
      Follow us