/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மரவியபாரி விட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை
/
மரவியபாரி விட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை
ADDED : ஜூன் 25, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், கொல்லிமலை யூனியன், வாழவந்திநாடு பூங்குளம்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி, 35; மர வியாபாரி. இவர், நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு
சென்றிருந்தார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் வைத்திருந்த, ஒரு லட்சம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, மர வியபாரி பாலாஜி அளித்த புகார்படி, வாழவந்திநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.