sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பூ வியாபாரி கொலையில் தலைமறைவாக இருந்தவர் கைது

/

பூ வியாபாரி கொலையில் தலைமறைவாக இருந்தவர் கைது

பூ வியாபாரி கொலையில் தலைமறைவாக இருந்தவர் கைது

பூ வியாபாரி கொலையில் தலைமறைவாக இருந்தவர் கைது


ADDED : ஜன 14, 2024 12:31 PM

Google News

ADDED : ஜன 14, 2024 12:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பூ வியாபாரி கொலையில், தலைமறைவாக இருந்த தறி தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர்.

பள்ளிப்பாளையம் அருகே தாஜ்நகரை சேர்ந்த ஆறுமுகம், 62, பூ வியாபாரி. இவர் கடந்த, 6ம் தேதி கீழ்காலனி பகுதியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஆறுமுகத்திற்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. பெண்ணிடம் நடத்திய விசாரணையில், ஆறுமுகத்தை கொலை செய்தது, தாஜ்நகரை சேர்ந்த தறி தொழிலாளி ரவி என தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை, பள்ளிப்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது; தாஜ்நகரை சேர்ந்த தறி தொழிலாளி ரவி. இவருக்கும் வைதேகி என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்தது. பின், வைதேகி ஆறுமுகத்திடம் தொடர்பு வைத்ததால், ரவி கோபமடைந்து கடந்த, 5 இரவு ஆறுமுகத்தின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். கொலைக்கு உதவி செய்ய சக்திவேல் என்பவரையும் அழைத்து சென்றுள்ளார். தலைமறைவாக இருந்த ரவியை கடலுாரில் கைது செய்தோம். சக்திவேலை தேடி வருகிறோம்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us