/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிம்ஸ் பூங்காவில் நடவு பணி 3.14 லட்சம் மலர் நாற்றுக்கள் தயார்
/
சிம்ஸ் பூங்காவில் நடவு பணி 3.14 லட்சம் மலர் நாற்றுக்கள் தயார்
சிம்ஸ் பூங்காவில் நடவு பணி 3.14 லட்சம் மலர் நாற்றுக்கள் தயார்
சிம்ஸ் பூங்காவில் நடவு பணி 3.14 லட்சம் மலர் நாற்றுக்கள் தயார்
ADDED : ஜன 23, 2024 12:18 AM

குன்னுார்;குன்னுார் சிம்ஸ்பூங்காவில், 64வது பழகண்காட்சியில் ஏப்ரல், மே மாத கோடை சீசனுக்காக, 3.14 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு பணி துவங்கியது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில், வரும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் மற்றும், 64-வது பழக்கண்காட்சியையொட்டி 3.14 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய தோட்டக்கலை திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக நாற்றுக்கள் நடவு பணி, சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.
ஊட்டி தோட்டக்கலை துணை இயக்குனர் சிபிலா மேரி மலர் நாற்றுகளை நடவு செய்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து தோட்டக்கலை பணியாளர்கள் நடவு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், 'ஆன்ட்ரினம், சால்வியா, பால்சம், பெகோனியா, மேரிகோல்டு, பிரஞ்ச் மேரிகோல்டு, பேன்சி, பிளாக்ஸ், பெட்டூனியா, ஸ்டாக்ஸ், கேலன்டுலா, லேடிலேஸ், அமரான்ஸ், ப்ரிமுளா , கிளியோம், ஆஸ்டர், லுாபின், டேலியா,' மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்படுகிறது.
மேலும், அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து போன்ற நாடுகளில், 30 மலர் செடி வகைகளில் 125 ரக மலர் நாற்றுக்கள் நடப்பாண்டு நடவு செய்யப்படுகிறது.

