sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

'தனி திறனை வெளிப்படுத்த அறிவு பசி அவசியம்' பன்னாட்டு கருத்தரங்கில் அறிவுரை

/

'தனி திறனை வெளிப்படுத்த அறிவு பசி அவசியம்' பன்னாட்டு கருத்தரங்கில் அறிவுரை

'தனி திறனை வெளிப்படுத்த அறிவு பசி அவசியம்' பன்னாட்டு கருத்தரங்கில் அறிவுரை

'தனி திறனை வெளிப்படுத்த அறிவு பசி அவசியம்' பன்னாட்டு கருத்தரங்கில் அறிவுரை


ADDED : ஜன 27, 2024 03:19 AM

Google News

ADDED : ஜன 27, 2024 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில், வள்ளலார் அறக்கோட்டம் மற்றும் கல்லுாரி தமிழ் துறை சார்பில், அருட்பிரகாச ராமலிங்க அடிகளாரின், 200வது ஆண்டு விழாவையொட்டி பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் நுால் வெளியீட்டு விழா நடந்தது.

கோவை அரசு கல்லுாரி பேராசிரியர் (ஓய்வு) கனல் மைந்தன் தலைமை வகித்து பேசுகையில், ''வள்ளலார் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு இடையே, துணிச்சலான முயற்சிகளை எடுத்து மன உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர்,'' என்றார்.

அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக உதவி பேராசிரியை குரு ஞானாம்பிகை பேசுகையில், ''சமரச சன்மார்க்கத்தை உருவாக்கி வேறுபாடற்ற சமுதாயத்திற்கு வள்ளலார் வழி வகுத்தார்,''என்றார்.

கலைமாமணி விருது பெற்ற முனைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசுகையில்,''பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற வள்ளலாரின் வாக்கிற்கு ஏற்பட மாணவ, மாணவிகள் வாழ்ந்து காட்டவும், அறிவு பசி என்பதை மனதில் வைத்து, தங்களின் தனிப்பட்ட திறமைகளை வெளி கொண்டு வருவதும் அவசியம்,'' என்றார். போட்டிகளில் சாதித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஜெர்மனி கட்டுரையாளர் மோரீஸ் கிலுபல், பாரதிதாசன் பல்கலை கழக தமிழ் துறை தலைவர் அலிபாவா, வள்ளலார் அறக்கோட்ட செயலாளர் சுஜாதா, பேராசிரியை அமுதா உட்பட பலர் பேசினர்.

'ஒப்பிலக்கிய நோக்கில் வள்ளலார்' என்ற நுாலை வெளியிட்ட, அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக உதவி பேராசிரியை குரு ஞானாம்பிகை வெளியிட கல்லுாரி செயலாளர் ஆனி பாம்ப்லானி பெற்றார்.

தமிழ் துறை தலைவர் மலர்விழி வரவேற்றார். கோவை அரசு கல்லுாரி பேராசிரியை மீனாட்சி (ஓய்வு) நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us