sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சேதமடைந்த நூலக கட்டடம்; புதிய கட்டடத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு

/

சேதமடைந்த நூலக கட்டடம்; புதிய கட்டடத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு

சேதமடைந்த நூலக கட்டடம்; புதிய கட்டடத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு

சேதமடைந்த நூலக கட்டடம்; புதிய கட்டடத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு


ADDED : ஜன 18, 2024 10:11 PM

Google News

ADDED : ஜன 18, 2024 10:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுாரில் பருவமழையின் போது இடிந்து விழுந்து சேதமடைந்த நுாலக கட்டடத்திற்கு மாற்றாக, புதிய கட்டடம் கட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கூடலுார் கிளை நுாலகம், ஊட்டி சாலை நகராட்சி வணிக வளாகத்தை ஒட்டி செயல்பட்டு வருகிறது. இங்கு புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த, 40 ஆண்டுள் பழமையான கட்டடம், 2022, ஆக., மாதம் பெய்த பருவ மழையின் போது இடிந்து விழுந்தது.

அதிலிருந்து, 50 ஆயிரம் புத்தகங்கள் மீட்கப்பட்ட நிலையில், 10 ஆயிரம் புத்தகங்கள் இடிபாடுகளில் இருந்து எடுக்க முடியாமல் வீணாக்கி போனது.

தொடர்ந்து, நுாலகம், ராஜகோபாலபுரம் பகுதியில் தனியார் வாடகை கட்டடத்துக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு, புத்தகங்கள் வைக்க மட்டுமே இடம் இருப்பதால் வாசகர்கள் அமர்ந்து படிக்க வசதி இல்லை.

இதனால், நுாலகத்துக்கு சொந்தமான இடத்தில், புதிய நுாலக கட்டடம் கட்டித்தர வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கூடலுார் நுாலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட நுாலகத்துறை ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை வரவேற்றுள்ள வாசகர்கள், 'நுாலகத்துக்கு சொந்தமான இடம் சாலையில் இருந்து அதிக உயரத்திலிருந்து உள்ளது.

எனவே, அப்பகுதியில் மண்ணை அகற்றி, மாற்றுத்திறனாளிகளும் எளிதாக நுாலகம் வந்து செல்லும் வகையில் சாலை அமைத்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும்,'என்றனர்.

மாவாட்ட நுாலக அலுவலர் வசந்தமல்லிகா கூறுகையில்,''நுாலகத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணி பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்படும். அவர்கள் அப்பணியை மேற்கொள்வர்,'' என்றனர்.






      Dinamalar
      Follow us