/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலூரில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
/
கூடலூரில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கூடலூரில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கூடலூரில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
UPDATED : ஜூன் 26, 2024 07:37 AM
ADDED : ஜூன் 26, 2024 07:29 AM

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் நேற்று துவங்கிய மழை, இடைவெளியின்றி பெய்து வருகிறது. கூடலூர் தேவர்சோலை சாலை, 4வது மைல் அருகே, இரவு 8:40 மணிக்கு மூங்கில் தூர் சாலையில் விழுந்தது.
தொடர் மழையினால், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று, மாவட்ட கலெக்டர் அருணா விடுமுறை அறிவித்துள்ளார்.
இன்று காலை வரை தேவாலாவில் அதிகபட்சமாக 186 மி.மீ., கூடலூர் - 148 மி.மீ., மேல்கூடலூர் - 142 மி.மீ., பாடந்துறை - 90 மி.மீ., ஓவேலி - 88 மி.மீ., செறுமுள்ளி - 69 மி.மீ., மழை பெய்துள்ளது. தொடரும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.