sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி

/

பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி

பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி

பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி


ADDED : செப் 17, 2025 11:52 PM

Google News

ADDED : செப் 17, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் ஓவேலி சாலையில் அரசு பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

கூடலுாரில் இருந்து ஓவேலி ஆரூட்டுப்பாறைக்கு இயக்கப்படும் அரசு பஸ் அடிக்கடி பழுதாகி இடையில், நிற்பதாக பயணிகள் புகார் கூறி வந்தனர். இதனை மாற்ற நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் ஆரூட்டுபாறையிலிருந்து, கூடலுார் புறப்பட்ட அரசு பஸ், முல்லை நகர் அருகே, பழுதாகி சாலையோரம் நின்றது. பயணிகள் பஸ்சிலிருந்து இறக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின், அவ்வழியாக வந்த மற்றொரு பஸ்சில் ஏற்றி சிலரை அனுப்பி வைத்தனர். மீதமிருந்த பலர், தனியார் வாகனத்தில் கூடலுார் வந்து சேர்ந்தனர்.

பயணிகள் கூறுகையில், 'கூடலுார் ஆருட்டுப்பறை இடையே இயக்கப்படும் பழைய பஸ், அடிக்கடி பழுதாகி, நிற்பதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். போதிய பஸ் வசதி இல்லாத இப்பகுதிக்கு, புதிய பஸ் இயக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us