sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாம்: தாகம் தணிக்க வருவதால் பாதுகாப்பு அவசியம்

/

குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாம்: தாகம் தணிக்க வருவதால் பாதுகாப்பு அவசியம்

குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாம்: தாகம் தணிக்க வருவதால் பாதுகாப்பு அவசியம்

குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாம்: தாகம் தணிக்க வருவதால் பாதுகாப்பு அவசியம்


ADDED : பிப் 01, 2024 10:21 PM

Google News

ADDED : பிப் 01, 2024 10:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:'பந்தலுார் அருகே காவயல் பகுதியில், குடியிருப்புகளை ஒட்டிய தடுப்பணையில் தண்ணீர் குடிக்க யானைகள் அடிக்கடி வருவதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பந்தலுார் அருகே மழவன் சேரம்பாடியில் இருந்து, கையுன்னி, புஞ்சைகொல்லி, காவயல் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் இரண்டு பக்கமும் கிராம குடியிருப்புகள் மற்றும் டான்டீ தேயிலை தோட்டமும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் குடியிருப்புகளும் அமைந்துள்ளது.

குடியிருப்பு பின்பகுதியில் புதர் பகுதி மற்றும் தடுப்பணைகள் உள்ளன. இதனால், இந்த பகுதியில் எந்த நேரமும் யானைகள் முகாமிட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, 2 குட்டிகளுடன் 5 யானைகள் முகாமிட்டு உள்ளன.

பகல் நேரங்களில் யானைகள் குடியிருப்புகளை ஒட்டி முகாமிட்டு இருப்பதால், தொழிலாளர்கள்; உள்ளூர் மக்கள் தண்ணீர் எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் கூறுகையில், 'பகல் நேரங்களில் வீடுகளின் பின் பகுதி புதர்களில் முகாமிடும் யானைகள், இரவில் வாசல்களில் முகாமிட்டு அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் வெறும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதை தவிர்த்து, அடர்த்தியான வனத்திற்குள் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வனக்குழுவினர் இந்த பகுதியில், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடியிருப்புகளை ஒட்டிய தடுப்பணையில் தண்ணீர் குடிக்க யானைகள் அடிக்கடி வருவதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us