/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிழற்குடையில் தெருநாய்கள் 'டேரா'; பயணிகளுக்கு இடையூறு
/
நிழற்குடையில் தெருநாய்கள் 'டேரா'; பயணிகளுக்கு இடையூறு
நிழற்குடையில் தெருநாய்கள் 'டேரா'; பயணிகளுக்கு இடையூறு
நிழற்குடையில் தெருநாய்கள் 'டேரா'; பயணிகளுக்கு இடையூறு
ADDED : ஜூன் 24, 2025 09:33 PM

கோத்தகிரி; கோத்தகிரி பஸ் நிலையம் பயணியர் நிழற்குடையில், தெரு நாய்கள் 'டேரா' போடுவதால், பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி பேரூராட்சி சமீபத்தில், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகர பகுதியில் போதிய அளவு கட்டமைப்பு வசதிகள் இல்லை. குறிப்பாக, தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்கு, இட வசதி குறைவு.
இந்நிலையில், தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குன்னுார் பஸ் நிறுத்தம் பகுதியில் அமைந்துள்ள பயணியர் நிழற்குடையில், கூட்டமாக நாய்கள் படுத்து விடுகின்றன.
இதனால், பயணியர் ஒருங்கே அமருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில், நாய்கள் துரத்துவதால், சாலையில் நடந்து செல்வோர் உட்பட, பயணியர் பாதிப்படைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.