sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோடை விழா புகைப்பட போட்டி 12க்குள் படங்களை அனுப்ப வேண்டும்

/

கோடை விழா புகைப்பட போட்டி 12க்குள் படங்களை அனுப்ப வேண்டும்

கோடை விழா புகைப்பட போட்டி 12க்குள் படங்களை அனுப்ப வேண்டும்

கோடை விழா புகைப்பட போட்டி 12க்குள் படங்களை அனுப்ப வேண்டும்


ADDED : மே 10, 2025 12:59 AM

Google News

ADDED : மே 10, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : புகைப்பட போட்டி யில் இடம்பெறும் சிறந்த புகைப்படத்திற்கு பரிசுகள் காத்திருக்கிறது.

கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: கோடை விழாவின் ஒரு பகுதியாக வரும், 13ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி நடக்கிறது.

ஆடவர், மகளிர் என தனித்தனியாகவும், இரு பாலரும் இணைந்து பங்கு பெறும் போட்டியும் நடக்கிறது. அதேபோல், நீலகிரி மாவட்ட வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தப்பட உள்ள புகைப்பட இக்கண்காட்சியில் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழில், வனவிலங்குகள் மற்றும் பாரம்பரிய கட்டடம் போன்ற சிறப்புமிகு வண்ணப் புகைப்படங்கள் இடம் பெறும். இதனை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுக்களிக்கலாம்.

கண்காட்சியின் ஒரு பகுதியாக புகைப்படம் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதில், நீலகிரி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட வன விலங்குகள், பழங்குடியினர் மக்கள் கலாசாரம், இயற்கை வனப்புடைய நிலம், பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் நீலகிரி மக்கள் குறித்த புகைப்படங்களை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் காட்சிப்படுத்தும் வகையில், 12 ம் தேதிக்குள் photoraphcontst2025@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்க வேண்டும். சிறந்த புகைப்படங்களுக்கு கோடை விழாவில் நிறைவு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us