ADDED : ஜன 19, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி : சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கருமத்தம்பட்டி அருகே, அரவிந்த் குமார், 27 என்பவருக்கு, திருமணம் ஆகி, நான்கு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மனைவி ஊருக்கு சென்ற நிலையில், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து, அரவிந்த் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

