sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது இலங்கை கடற்படையினர் அராஜகம்

/

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது இலங்கை கடற்படையினர் அராஜகம்

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது இலங்கை கடற்படையினர் அராஜகம்

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது இலங்கை கடற்படையினர் அராஜகம்


ADDED : ஜன 24, 2024 01:51 AM

Google News

ADDED : ஜன 24, 2024 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:நடுக்கடலில் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்தனர்.

ஜன., 22ல் ராமேஸ்வரத்தில் இருந்து 480 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இவர்கள் வழக்கம் போல் இந்திய இலங்கை எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு இரு கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியை காட்டி எச்சரித்து விரட்டினர்.

இதனால் பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை அவசரமாக படகில் இழுத்து வைத்துக் கொண்டு படகுகளுடன் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

இதில் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஐசக், ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் ஆகியோரது படகுகளில் இருந்த மீனவர்கள் வலையை இழுக்க தாமதமானது.

இதனால் ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள் இருவரது படகுகளை மடக்கி பிடித்தனர். படகில் இருந்த மீனவர்கள் ஐசக் 47, சிசேரியன் 43, சமாதான பிரபு 38, மற்றொரு படகில் இருந்த ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் 43, நிசாந்தன் 34, முருகேசன் 50, ஆகியோரை கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். பின் மீனவர்கள் மீது எல்லை தாண்டியதாக மீன்துறையினர் வழக்கு பதிந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

தங்கக்கட்டிகளை கடத்தியவர்


ஜன.,3ல் இலங்கையில் இருந்து விசைப்படகில் தங்கக்கட்டிகள் கடத்திய ஐசக்கை தங்கச்சிமடத்தில் சுங்கத்துறையினர் மடக்கினர். அதிகாரிகளுடன் மல்லுக்கட்டிய ஐசக் தங்கக்கட்டிகளை போட்டு விட்டு தப்பினார். அவர் விட்டு சென்ற 7 கிலோ 700 கிராம் தங்கக்கட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து ஐசக்கை தேடி வந்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படை கைது செய்த 6 மீனவர்களில் ஐசக்கும் சிக்கியுள்ளார்.








      Dinamalar
      Follow us