/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
69 ஆண்டுகள் அவலம் *முதுகுளத்துார், கமுதி நுாலகத்திற்கு கட்டடம் இல்லை *வாசகர்கள் அவதிப்படுவதோடு அரசு நிதியும் வீணடிப்பு
/
69 ஆண்டுகள் அவலம் *முதுகுளத்துார், கமுதி நுாலகத்திற்கு கட்டடம் இல்லை *வாசகர்கள் அவதிப்படுவதோடு அரசு நிதியும் வீணடிப்பு
69 ஆண்டுகள் அவலம் *முதுகுளத்துார், கமுதி நுாலகத்திற்கு கட்டடம் இல்லை *வாசகர்கள் அவதிப்படுவதோடு அரசு நிதியும் வீணடிப்பு
69 ஆண்டுகள் அவலம் *முதுகுளத்துார், கமுதி நுாலகத்திற்கு கட்டடம் இல்லை *வாசகர்கள் அவதிப்படுவதோடு அரசு நிதியும் வீணடிப்பு
ADDED : ஜன 21, 2024 03:18 AM
முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார், கமுதி கிளை நுாலகம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டத்தில் செயல்பட்டு வருவதால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.
முதுகுளத்துார் கிளை நுாலகம் 1957ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது வரை நுாலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. நிரந்தர கட்டடம் இல்லாததால் சில மாதங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு வாடகை கட்டடத்திற்கு மாற்றி வருகின்றனர். இதனால் வாசகர்கள் சிரமப்படுகின்றனர்.
தற்போது முதுகுளத்துார்--கடலாடி முக்குரோடு அருகே உள்ள வாடகை வீட்டில் இயங்கி வருகிறது. இதேபோல் கமுதி கிளை நுாலகம் 1954ம் ஆண்டு தொடங்கப்பட்டு 69 ஆண்டுகளாக வாடகை கட்டத்தில் செயல்பட்டு வருகிறது. போதுமான இட வசதி இல்லாமல் ஏராளமான புத்தகங்களை வெளியில் வைக்க முடியாமல் சாக்கு மூடையில் கட்டி வைக்கும் நிலை உள்ளது.
மழைக்காலங்களில் கட்டடத்தில் மழைநீர் கசிவதால் ஏராளமான புத்தகங்கள் வீணாகி வருகிறது.அடிப்படை வசதிகளும் இல்லை. வாசகர்கள் கூறியதாவது:
முதுகுளத்துார், கமுதியில் கிளை நுாலகம் தொடங்கப்பட்டு 65 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு 7000 உறுப்பினர்கள் உள்ளனர். இரண்டு நுாலகத்திலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன.
ஒவ்வொரு ஊராட்சிகளிலும் உள்ள கிராமப்புற நுாலகங்களில் பல ஊராட்சி அலுவலகம், ரேஷன் கடை, இ-சேவை மையங்களாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஊராட்சிகளில் ஏராளமான நுாலகங்கள் பூட்டப்பட்டுள்ளது. இதனால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கிளை நுாலகத்தை தேடி வருகின்றனர்.
சொந்த கட்டடங்கள் இல்லாததால் அடிக்கடி இடம் மாற்றப்பட்டு வருகிறது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. இதனால் வாசகர்களும் சிரமப்படுகின்றனர். ஒரு சில நேரங்களில் நுாலகத்தை தேடி அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. போதுமான இடவசதி இல்லாமல் ஏராளமான புத்தகங்களை வெளியில் வைக்க முடியாமல் வீணாகும் நிலை உள்ளது.
இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முதுகுளத்துார், கமுதி பகுதியில் அரசுக்கு சொந்தமான கட்டடங்கள் பயனற்று கிடக்கிறது. இதில் ஏதேனும் இடத்தை தேர்வு செய்து கிளை நுாலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதே போல் மாவட்டம் முழுவதும் பல நுாலகங்களின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது. வாசகர்கள் பயனடையவும், புத்தகங்கள் வீணாவதை தடுக்கவும் அரசு சொந்த கட்டடங்களை கட்ட வேண்டும்.
---

