sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உடலின் உட்புறத்தை படம்பிடிக்கும் நவீன எக்ஸ்ரே மிஷின்

/

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உடலின் உட்புறத்தை படம்பிடிக்கும் நவீன எக்ஸ்ரே மிஷின்

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உடலின் உட்புறத்தை படம்பிடிக்கும் நவீன எக்ஸ்ரே மிஷின்

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உடலின் உட்புறத்தை படம்பிடிக்கும் நவீன எக்ஸ்ரே மிஷின்


ADDED : மே 22, 2025 11:53 PM

Google News

ADDED : மே 22, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 'பிளோரோஸ்கோபி' எனப்படும் எக்ஸ்-கதிர்கள்மூலம் உடலின் உட்புறத்தை வீடியோவை போல நகரும் படங்களை எடுக்கும் அதிநவீன எக்ஸ்ரே மிஷின்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு ரூ.77 லட்சத்தில் 800 எம்.ஏ.எஸ் பிளோரோஸ்கோபி அதிநவீன எக்ஸ்ரே மிஷின் வாங்கப்பட்டுள்ளது. இதில் எக்ஸ்--கதிர்கள் மூலம் உடலின் உட்புறத்தை நிகழ்நேரத்தில் பார்க்க முடியும்.

இது வீடியோவைப் போல நகரும் படங்களை எடுக்கும் ஒரு முறையாகும். இதன் மூலம் உடல் உறுப்புகளின் இயக்கத்தைக் காணவும், உடல் உறுப்புகளின் இயக்கம், ரத்த ஓட்டம் போன்றவற்றை ஆய்வு செய்ய முடியும்.

மேலும் ரூ.60 லட்சத்தில் மார்பக புற்றுநோயை எளிதாக கண்டறிய உதவிடும் 'மேமோகிராபி' மிஷின் வாங்கியுள்ளனர். இதன் மூலம் குறைந்த அளவு எக்ஸ்--கதிர்களைப் பயன்படுத்தி மார்பகப் புற்றுநோயை படம் எடுக்கலாம். மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் மார்பகப் புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களை மதிப்பீடு செய்யலாம்.

எக்ஸ்ரே பிரிவு அறையில் உள்ள இரு நவீன மிஷின்களையும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் அமுதா ராணி நோயாளிகள் பயன்பாட்டிற்காக துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் ராஜ்குமார், ஆதிஸ்வரன், முத்துபிரவீன் மற்றும் எக்ஸ்ரே பிரிவு தலைமை டெக்னீயன் ரவிச்சந்திரன் உட்படபணியாளர்கள் பங்கேற்றனர்.

இந்த அதிநவீன பிளோரோஸ்கோபி, மேமோகிராபி எக்ஸ்ரே மிஷின்கள்ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் இல்லை. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மட்டுமே உள்ளது.

எனவே மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். எக்ஸ்ரே பிலிம் தேவைப்பட்டால் ரூ.50 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us