/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சூறாவளி: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
/
சூறாவளி: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
ADDED : ஜன 10, 2024 12:18 AM
ராமேஸ்வரம்:
-வங்கக்கடலில் சூறாவளிக் காற்று வீச உள்ளதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.
வங்க கடலில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இச்சூழலில் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வது சிரமம் இருக்கும் என்பதால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்து செல்ல மீன்துறை உதவி இயக்குநர்கள் தடை விதித்தனர்.
இதனால் இன்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.
தொடர் சூறாவளிக் காற்றால் மீன்பிடிக்க முடியாமல் வாழ்வாதாரம் இழந்து வீடுகளில் முடங்கி கிடப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

