/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் தீபம் ஏற்றினர்
/
ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் தீபம் ஏற்றினர்
ADDED : ஜன 23, 2024 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேத்தையொட்டி ராமேஸ்வரம் காஞ்சி சங்கர மடத்தில் பொதுமக்கள் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்ததும் நாடு முழுவதும் பொதுமக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி கோயில்கள், தெருக்களில் அன்னதானம் வழங்கி உற்சாகத்துடன் கொண்டாடினர்.
அதன்படி நேற்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் பொதுமக்கள் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் காஞ்சி மடம் மேலாளர் சுந்தரம், நிர்வாகி சாச்சா உட்பட பலர் பங்கேற்றனர்.

