sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஹெலிகாப்டர் சக்கரம் பதிந்தது பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை

/

ஹெலிகாப்டர் சக்கரம் பதிந்தது பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை

ஹெலிகாப்டர் சக்கரம் பதிந்தது பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை

ஹெலிகாப்டர் சக்கரம் பதிந்தது பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை


ADDED : ஜன 21, 2024 07:40 AM

Google News

ADDED : ஜன 21, 2024 07:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்திற்கு வந்த பிரதமர் மோடியின் எம்.ஐ17 ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது சக்கரம் 20 செ.மீ., தரையில் புதைந்தது. ெஹலிபேட் அமைத்தது குறித்துபாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் உள்ளார். நேற்று காலை திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் நேற்று மதியம் 2:15 மணிக்கு ராமேஸ்வரம் அருகே அமிர்தா பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட ெஹலிபேடில் வந்திறங்கினார்.

சமீபத்தில் பெய்த தொடர் மழையால் மைதானம் முழுவதும் ஈரப்பதமாக இருந்தது. இதனை சரி செய்து ெஹலிபேடு அமைக்கப்பட்டிருந்தது. பிரதமர் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது அதன் சக்கரம் 20 செ.மீ., வரை தரையில் புதைந்தது.

இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மைதானம் அமைக்கப்பட்ட விதம், பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாட்டில் குறைபாடு ஏற்பட்டுள்ளதா, ஹெலிபேட் அமைத்தவர்கள் குறித்தும் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us