sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கச்சத்தீவு திருவிழா: தமிழக மீனவர் வழிபாட்டு உரிமை கோரி கடிதம் 2800 பக்தர்களுக்கு அனுமதி

/

கச்சத்தீவு திருவிழா: தமிழக மீனவர் வழிபாட்டு உரிமை கோரி கடிதம் 2800 பக்தர்களுக்கு அனுமதி

கச்சத்தீவு திருவிழா: தமிழக மீனவர் வழிபாட்டு உரிமை கோரி கடிதம் 2800 பக்தர்களுக்கு அனுமதி

கச்சத்தீவு திருவிழா: தமிழக மீனவர் வழிபாட்டு உரிமை கோரி கடிதம் 2800 பக்தர்களுக்கு அனுமதி


ADDED : ஜன 24, 2024 01:50 AM

Google News

ADDED : ஜன 24, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:கச்சத்தீவு திருவிழாவில் தமிழக கத்தோலிக்க மீனவர்களின் வழிபாட்டு உரிமை கோரி இலங்கை மீன் வளத்துறை அமைச்சருக்கும், யாழ்பாணம் மறை மாவட்ட ஆயருக்கும் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியது. இதற்கிடையில் 2800 பக்தர்கள் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் பாதுகாப்பிற்கும், கடல் மீன் வளம் வேண்டியும் 1913 முதல் கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர். திருவிழாவின் போது பாரம்பரிய மீனவர்கள் தாய் பங்கான தங்கச்சிமடத்தில் இருந்து அருட்பணியாளர்கள், தங்கள் குடும்பத்தினர்களை அழைத்துக்கொண்டு நாட்டுப்படகில் கச்சத்தீவு சென்று வந்தனர். 1974ம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்திய பாரம்பரிய மீனவர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கும் ஒப்பந்தத்தின் 5வது சரத்தில் சர்ச் திருவிழாவிற்கு பாரம்பரிய மீனவர்கள் விசா உள்ளிட்ட எந்த அனுமதியும் இல்லாமல் குடும்பத்துடன் சென்று வழிபடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் சமீப காலமாக மீறப்படுகிறது. பாரம்பரிய நாட்டுப்படகு பயணத்தை 2014ல் தடை செய்தனர். 2018ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையை மீட்டனர்.

இந்நிலையில் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி அனுப்பிய கடிதத்தில், 'இந்த ஆண்டு இந்திய பாரம்பரிய கத்தோலிக்க மீனவர்களின் உணர்வுக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை மதிப்பளிக்கும் வகையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா அழைப்பிதழை கச்சத்தீவு பாரம்பரிய பயண குழுவிற்கும் அனுப்ப வேண்டும்,'என கூறியுள்ளார்.

2800 பக்தர்களுக்கு அனுமதி


பிப்.23, 24ல் கச்சதீவு சர்ச்சில் திருவிழா நடக்க உள்ளது. இவ்விழாவில் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் செல்ல ஆர்வமுடன் உள்ளனர்.

யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயரிடம் இருந்து ராமேஸ்வரத்தில் உள்ள பாதிரியார் சந்தியாகுவுக்கு கடிதம் வந்துள்ளது. இந்தியாவில் இருந்து 70 படகுகளில் பக்தர்களை திருவிழாவுக்கு அழைத்து வருமாறு ஆயர் தெரிவித்துள்ளார். அதன்படி ஒரு படகில் 40 பேர் வீதம் 2800 பக்தர்கள் செல்ல ராமேஸ்வரம் கச்சதீவு திருவிழாக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us