நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : -கீழக்கரையை சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆதிப் இப்ராகிம் 8. நேற்று கீழக்கரை பழைய மீன் மார்க்கெட் பகுதிக்கு வந்துள்ளார். மீன் மார்க்கெட் பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதை உணர்ந்த சிறுவன் கையில் இருந்த பணம் ரூ.50க்கு ப்ளீச்சிங் பவுடர் வாங்கி மீன் கடை வளாகத்தினுள் தேங்கி இருந்த கழிவு நீர் கால்வாயில் சுகாதாரம் கருதி ப்ளீச்சிங் பவுடரை கையுறை உபயோகித்து தெளித்தார்.
சிறுவனின் செயல் அப்பகுதியில் வீடியோவாக எடுக்கப்பட்டு வைரலாக பரவியது. சிறுவன் முயற்சிக்கு மீன் வியாபாரிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

