நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் ராமநாதபுரத்தில் உள்ள எல்.ஐ.சி., கிளை அலுவலகம் முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறைகளுடன் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. மதுரை கோட்ட முதுநிலை மேலாளர் நாராயணன் தலைமை வகித்தார். தென்மண்டல தலைமை பொறியாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். தென் மண்டல மேலாளர் வெங்கட ரமணன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மதுரை கோட்ட வணிக மேலாளர் முத்தையன், பாலிசிதாரர்கள் , முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முதல் நிலை அதிகாரிகள் ஊழியர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் கிளை முதன்மை மேலாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.