ADDED : ஜன 23, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: கீழக்கரை தாலுகா கதைக்குளம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு பாதை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு அளித்தனர்.
வெள்ளாமருச்சுகட்டி ஊராட்சி கதைக்குளத்தில் 60 குடும்பத்தினர் வசிக்கிறோம். சுடுகாட்டு பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் களரி வழியாக 8 கி.மீ., சுற்றிச் சென்று சிரமப்படுகிறோம். எனவே சுடுகாட்டிற்கு பாதை அமைத்துத்தர அதிகாரிகள் முன்வர வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

