ADDED : ஜன 24, 2024 05:18 AM

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. முன்னதாக ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து காளை வாகனத்தில் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே போல் திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் ஆகிய கோயில்களிலும் பிரதோஷ பூஜை நடந்தது.
மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிேஷகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம் போன்ற பக்திப் பாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

