sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்யுங்கள்: தாசில்தார்

/

இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்யுங்கள்: தாசில்தார்

இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்யுங்கள்: தாசில்தார்

இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்யுங்கள்: தாசில்தார்


ADDED : செப் 25, 2025 11:19 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும் என பொதுமக்களுக்கு தாசில்தார் அறிவுரை வழங்கியுள்ளார்.

திருவாடானை தாசில்தார் ஆண்டி கூறியதாவது: பொது மக்கள் சிலர் உறவினர்கள் உயிரிழந்து சில நாட்களில் விண்ணப்பிப்பதில்லை. சொத்து பிரித்தல் அல்லது பிற அரசு சேவைகள் தொடர்பாக தேவைப்படும் போது விண்ணப்பிக்கின்றனர். இதனால் இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் தேவையில்லாத காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வீட்டில் முதியவர்கள், உறவினர்கள் இறந்தால் 21 நாட்களுக்குள் வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும்.

காலதாமதமாக பதிவு செய்ய சென்றால் காலதாமத கட்டணம் செலுத்தி முறையான விசாரணைக்கு பின் இறப்பு சான்றிதழ் வழங்கப்படும். எனவே இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். அதே போல் பிறப்பு சான்றிதழ் பெறும் போது பெற்றோர் பலர் பெயர் பதிவு செய்யாமல் இருந்து விடுகின்றனர்.

பள்ளியில் சேர்க்கும் போது அல்லது பிற வருவாய் சான்றிதழ்கள் வாங்கும் போது சிலர் குழந்தைகள் பெயரை பதிவு செய்ய வருகின்றனர். இதனால் கால தாமதம் ஏற்படும். இதனை தவிர்க்க குழந்தைகள் பிறந்து ஓராண்டிற்குள் பெயரை சான்றிதழில் பதிவு செய்ய வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us
      Arattai