sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீன் வளத்துறை ஆய்வாளரின் வீட்டில் கிடைத்த ரூ.39.80 லட்சம் துணை இயக்குனரிடம் ஒப்படைப்பு

/

மீன் வளத்துறை ஆய்வாளரின் வீட்டில் கிடைத்த ரூ.39.80 லட்சம் துணை இயக்குனரிடம் ஒப்படைப்பு

மீன் வளத்துறை ஆய்வாளரின் வீட்டில் கிடைத்த ரூ.39.80 லட்சம் துணை இயக்குனரிடம் ஒப்படைப்பு

மீன் வளத்துறை ஆய்வாளரின் வீட்டில் கிடைத்த ரூ.39.80 லட்சம் துணை இயக்குனரிடம் ஒப்படைப்பு


ADDED : ஜூன் 26, 2025 02:00 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:-ராமநாதபுரத்தில் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட மீன் வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.39.80 லட்சத்தைமீன் வளத்துறை துணை இயக்குநரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மீன் வளத்துறை வடக்கு அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரிந்த சகுபர் சாதிக் 49, புதிய நாட்டுப்படகுக்கு மீன் பிடி உரிமம் வழங்குவதற்காக பனைக்குளத்தை சேர்ந்தவரிடம் ரூ.1600 லஞ்சமாக பெற்ற போது ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் 13 வது தெருவில் உள்ள மாஸ் ரெசிடன்சியில் உள்ள சகுபர் சாதிக் வீட்டில் டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மதியம் 1:40 முதல் இரவு 11:00 மணி வரை சேசாதனை நடத்தினர்.

இதில் அவரது வீட்டில் இருந்து 42 லட்சத்து 3120 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதில் 13 மீன்வளக் கூட்டுறவு சங்கங்களின் சார்பில் வசூல் செய்யப்பட்டு அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.90 லட்சத்து 6340 என்றும், அதில் ரூ.50 லட்சத்து 6630 செலுத்தப்பட்டு மீதமுள்ள தொகை ரூ.39 லட்சத்து 80 ஆயிரத்து 300 ம், தனது சொந்த செலவிற்காக வைத்திருந்த ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 100 ம் இருந்தது எனவும் அவர் கூறிானர். இது குறித்து மீன் வளத்துறை உதவி இயக்குநர், துணை இயக்குநரிடம் விசாரிக்கப்பட்டதில் உண்மையான தகவல் என்று கூறி அதற்கான ஆவணங்களையும் அளித்தனர்.

இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களின் பணம் ரூ.39 லட்சத்து 80 ஆயிரத்து 300 ஐ மீன் வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத்திடம் போலீசார் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us