நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் மகள் அபிநயா 20. சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டவர் சிகிச்சை பெற்று வந்தார். அபிநயாவின் தாய் மீனாம்பாள் முதுகுளத்துாரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது அபிநயா மரச்சட்டத்தில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.முதுகுளத்துார் இன்ஸ்பெக்டர் பெரியார் விசாரிக்கிறார்.

