sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பூஜ்ஜிய கரிம வேளாண்மை குறித்துவிவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு

/

பூஜ்ஜிய கரிம வேளாண்மை குறித்துவிவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு

பூஜ்ஜிய கரிம வேளாண்மை குறித்துவிவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு

பூஜ்ஜிய கரிம வேளாண்மை குறித்துவிவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு


ADDED : மார் 26, 2025 02:01 AM

Google News

ADDED : மார் 26, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூஜ்ஜிய கரிம வேளாண்மை குறித்துவிவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு

சேலம்:காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தடுக்க, வேளாண்மையில் பூஜ்ஜிய கரிம பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு நடந்தது.

சேலம் வேளாண்மைத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணைந்து, நேற்று வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம் தலைமையில், பூஜ்ஜிய கரிம வேளாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. வேளாண்மை துணை இயக்குனர்கள் நீலாம்பாள், கண்ணன், கமலம், நாகராஜன், உதவி இயக்குனர் கவுதம், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் ரவி, ஏத்தாப்பூர் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய பேராசியர் வீரமணி ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறையில் இருந்து தலா, 25 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, 50 அங்கக விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர். அளவுக்கு அதிகமான கரிம வாயுக்களால், புவி வெப்பமடைந்து பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு, அடிக்கடி இயற்கை பேரழிவு ஏற்படுகிறது.

இதை தடுக்க வேளாண்மையில் ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், கரும்பு, மக்காச்சோளம், சோளத்தட்டு கழிவுகளை தீ வைத்து எரிக்கக்கூடாது. விவசாயத்தில் கரிம பயன்பாட்டை பூஜ்ஜிய அளவுக்கு குறைக்க விவசாயிகள் முன்வர வேண்டும் என, பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us