ADDED : மே 10, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலத்தில் நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு சாரல் மழை, சில பகுதிகளில் மித மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சங்ககிரியில், 11.2 மி.மீ., மழை பதிவானது. ஏற்காடு, 2.2, சேலம், 1.4 மி.மீ., மழை பெய்துள்ளது.
நேற்று முன்தினமும் பலத்த காற்று வீசி மழை பெய்தது. இதில் சேலம் தெற்கு எரசனாம்பட்டியில் செங்கோட்டையன், மருளையம்பாளையம் ஜெயகோபி; பெத்தநாயக்கன்பாளையம், கல்லேரிப்பட்டியில் ராஜா; தலைவாசல், சார்வாய் கலியபெருமாள் ஆகியோரது வீடுகள், வாழப்பாடி, அருநுாற்றுமலையில் பெரியசாமிக்கு சொந்தமான மாட்டு கொட்டகை சேதமாகின.