sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இறந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்

/

இறந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்

இறந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்

இறந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்


ADDED : ஜன 24, 2024 09:57 AM

Google News

ADDED : ஜன 24, 2024 09:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: இறந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

மேச்சேரி அருகே கோவில் வெள்ளார் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கிருஷ்ணன் மகன் நாகராஜ், 19. பத்தாம் வகுப்பு படித்த இவர், ஓசூரில் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார்.

பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவர் கடந்த, 19ல், ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் வேலைக்கு புறப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மதியம், 12:30 மணிக்கு சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. விபத்தில் படுகாயமடைந்தவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தார் ஒப்புதலுடன், நாகராஜின் இரு கண்கள் தானமாக பெறப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கும், தோல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உடலுக்கு அரசு மரியாதை

உடல் உறுப்பு தானம் செய்த நாகராஜ் உடல் அவரது சொந்த ஊரான மேச்சேரி ஒன்றியம், வெள்ளாறில் உள்ள வீட்டுக்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது. மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி, மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார்.

மேட்டூர் தாசில்தார் விஜி, டி.எஸ்.பி., மரியமுத்து, மேச்சேரி இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், எம்.எல்.ஏ., சதாசிவம், மேச்சேரி ஆர்.ஐ., சக்திகுமார், வெள்ளாறு வி.ஏ.ஓ., மைதிலி மற்றும் அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us