/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முன்பதிவில்லா நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு
/
முன்பதிவில்லா நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு
முன்பதிவில்லா நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு
முன்பதிவில்லா நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு
ADDED : ஜன 24, 2024 12:07 PM
சேலம் : ஈரோடு-நெல்லை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில், இன்று முதல் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஈரோட்டில் இருந்து, நெல்லைக்கு இயக்கப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயிலின் இயக்கம் இன்று முதல் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.
இன்று மதியம், 2:00 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயில் இரவு, 8:50 மணிக்கு திருநெல்வேலிக்கும், இரவு, 11:10 மணிக்கு செங்கோட்டைக்கும் சென்றடைகிறது.மறுமார்க்கத்தில் நாளை காலை, 5:00 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில், 6:25 மணிக்கு திருநெல்வேலிக்கும், மாலை, 3:00 மணிக்கு ஈரோடு வந்தடைகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

