sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அனல்மின் நிலையம் அருகே பாலத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் புதுப்பிப்பு

/

அனல்மின் நிலையம் அருகே பாலத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் புதுப்பிப்பு

அனல்மின் நிலையம் அருகே பாலத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் புதுப்பிப்பு

அனல்மின் நிலையம் அருகே பாலத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் புதுப்பிப்பு


ADDED : ஜூன் 25, 2025 01:51 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், மேட்டூர், தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் இருந்து தினமும், 2.40 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து சுத்திகரித்து, ஓமலுார், காடையாம்பட்டி தாலுகா மற்றும் வழியில் உள்ள டவுன் பஞ்சாயத்து பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இதில் காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் அமைத்து, 25 ஆண்டுக்கு மேலானதால், ஆங்காங்கே உடைந்து குடிநீர் வீணானது.

இதனால் புதிதாக குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று இறுதியாக, அனல்மின் நிலையம் அருகே உள்ள காவிரி பாலத்தில், 210 மீ., நீள குழாய்களை அகற்றி, புது குழாய் பொருத்தும் பணியை, ஒப்பந்த நிறுவனம் தொடங்கியது. அப்போது குடிநீர் வடிகால் வாரிய சேலம் மேற்பார்வை பொறியாளர் ரமேஷ்பாபு பார்வையிட்டு, பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி, விரைவாக முடிக்க அறிவுறுத்தினார். இப்பணி தொடர்ந்து, 3 நாட்கள் நடக்கும் என்பதால், அதுவரை காடையாம்பட்டி கூட்டுக்

குடிநீர் திட்டத்தில் வினியோகம் பாதிக்கும். இதுகுறித்து ஏற்கனவே காடையாம்பட்டி, ஓமலுார் தாலுகா, ஊராட்சி அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us
      Arattai