sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க கொங்கு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

/

தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க கொங்கு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க கொங்கு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க கொங்கு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 24, 2025 06:59 AM

Google News

ADDED : மார் 24, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: சேலம் மாவட்ட கொங்கு வேளாளர் கவுண்டர் சங்கம் சார்பில், சங்ககிரியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு மண்டபம் அருகே, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. நிறுவனர் சுகுமார் தலைமை வகித்தார். அதில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு, சங்ககிரியில் உருவச்சிலை அமைக்க கோஷம் எழுப்பினர். அதில், 'நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் அறிவித்து வரும் ஆடி, 18க்குள், தீரன் சின்னமலை உருவச்சிலையை சங்ககிரியில் அமைக்க வேண்டும்' என்றனர்.

இதில் சங்ககிரி வட்டார கொங்கு இளைஞர் சங்க தலைவர் ராமசாமி, சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி, சங்ககிரி கொங்கு வட்டார அறக்கட்டளை தலைவர் வெங்கடேஷ், ஒருங்கிணைப்பாளர் ஜெயபால், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை யுவராஜ் பிரிவு மாநில பொதுச்செயலர் சுவிதா உள்பட, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து அனைவரிடமும் கையெழுத்தும் பெறப்பட்டது. இதில் சங்ககிரி, ஓமலுார், இடைப்பாடி, கொங்கணாபுரம், மேச்சேரி, சேலம், பனமரத்துப்பட்டி, ஆத்துார், தர்மபுரி, அரூர், திருச்செங்கோடு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us