/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
1,300 கிலோ ரேஷன் அரிசி வீட்டில் பதுக்கியவர் கைது
/
1,300 கிலோ ரேஷன் அரிசி வீட்டில் பதுக்கியவர் கைது
ADDED : ஜூன் 23, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் புட்செல் போலீசார், வீராணம், மூங்கில்குத்து கிரா-மத்தில் உள்ள ஓட்டு வீட்டில், நேற்று சோதனை நடத்தினர்.
20க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி இருப்-பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடை, 1,300 கிலோ. விசார-ணையில் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், 29, மக்களிடம் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி பதுக்கிவைத்தது தெரிந்தது. அதை முறுக்கு கம்பெனி, வடமாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் தெரிந்தது. இதனால் கடத்த-லுக்கு பயன்படுத்திய, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., சூப்பர் மொபட், 1,300 கிலோ அரிசியை பறிமுதல் செய்த போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.