ADDED : ஜூன் 25, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், நரசோதிப்பட்டி, பெருமாள் மலை அடிவாரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 40. இவரது மனைவி மகேஸ்வரி. இருவரும் வெள்ளி பட்டறையில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, 17, 11 வயதுகளில் இரு மகள்கள், 10 வயதில் மகன் உள்ளனர். மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்ததால், தினமும் தம்பதி இடையே தகராறு இருந்தது.
இதில் கடந்த, 16ல் ஏற்பட்ட தகராறில், அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு, மகன், மகள்களுடன் மகேஸ்வரி தங்கியுள்ளார். இந்நிலையில், 19ல் உறவினர் வீட்டில் இருந்து, 4 பேரும் மாயமாகினர். எங்கு தேடியும் கிடைக்காததால், ராமச்சந்திரன் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.