sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: மாட்டு வண்டியில் கமிஷனர் வலம்

/

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: மாட்டு வண்டியில் கமிஷனர் வலம்

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: மாட்டு வண்டியில் கமிஷனர் வலம்

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: மாட்டு வண்டியில் கமிஷனர் வலம்


ADDED : ஜன 14, 2024 11:24 AM

Google News

ADDED : ஜன 14, 2024 11:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம், லைன்மேட்டில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில், மாநகர போலீஸ் சார்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு மைதானம் முழுதும் கோலங்களால் அலங்கரிக்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, பாரம்பரிய உடையில் பொங்கல் வைத்தார். தொடர்ந்து மாட்டு வண்டியில் உலா வந்தார். பின் கண்களை கட்டிக்கொண்டு பானையை உடைத்தும் உற்சாகப்படுத்தினார். போலீஸ் அலுவலர்கள், குடும்பத்துடன் பங்கேற்றனர். போலீசார், குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதேபோல் வாழப்பாடி போலீஸ் உட்கோட்ட அலுவலகத்தில், டி.எஸ்.பி., ஹரிசங்கரி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சேலம் எஸ்.பி., அருண் கபிலன் முன்னிலையில் வாழப்பாடி, காரிப்பட்டி,

ஏத்தாப்பூர் போலீசார், பாய்ஸ் கிளப் சிறுவர்கள், பொங்கல் வைத்தனர். தொடர்ந்து சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு, எஸ்.பி., பரிசு வழங்கினார்.

இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் பொங்கள் வைத்தனர். நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். தாரமங்கலம் நகராட்சியில் நடந்த பொங்கல் விழாவில் தலைவர் குணசேகரன், துணைத்தலைவர் தனம், கமிஷனர் சேம் கிங்ஸ்டன், கவுன்சிலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். மேலும், தாரமங்கலம் நகராட்சி தலைவர் உள்பட, 27 கவுன்சிலர்கள் வழங்கிய நிதி மூலம் பணியாளர்கள், துாய்மை, ஒப்பந்த பணியாளர்கள் என, 180 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us