sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுடர் ஏந்தி ஓடிய ஸ்டாலின்

/

சுடர் ஏந்தி ஓடிய ஸ்டாலின்

சுடர் ஏந்தி ஓடிய ஸ்டாலின்

சுடர் ஏந்தி ஓடிய ஸ்டாலின்


ADDED : ஜன 21, 2024 12:01 PM

Google News

ADDED : ஜன 21, 2024 12:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த, 1972 ஏப்., 8, 9ல் காஞ்சிபுரத்தில், தி.மு.க., மாநாடு நடந்தது. அப்போதைய தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் நெடுஞ்செழியன், பொருளாளர்

எம்.ஜி.ஆர்., பங்கேற்ற நிலையில், மிகப்பெரிய ஊர்வலம் நடந்தது. அண்ணாதுரை பிறந்த ஊரில் நடக்கும் மாநாட்டில், தன் பங்கு இருக்க வேண்டும் என விரும்பிய ஸ்டாலின், இளைஞர் தி.மு.க., சார்பில், அண்ணாதுரை பெயரில் சுடரை ஏந்தி, சென்னையில் இருந்து தொடர் ஓட்டமாக கொண்டு சென்று, மாநாட்டு பந்தலில் ஒப்படைக்க முடிவு செய்தார். அதன்படி மாநாட்டு நாளில், சென்னை, அண்ணாதுரை நினைவிடத்தில் இருந்து சுடர் ஓட்டம் புறப்பட்டது. காஞ்சிபுரம் நகர எல்லையிலிருந்து, மாநாட்டு பந்தல் வரை, ஸ்டாலின் சுடரை ஏந்தி ஓடிவந்து, தலைவர், பொதுச்செயலர் கையில் ஒப்படைத்தார். இதுகுறித்த செய்தி, மறுநாள், 'முரசொலி' நாளிதழில் படத்துடன் வெளியானது.

சினிமா வசனகர்த்தா

கருணாநிதி வசனம் எழுதிய முதல் படம் 'ராஜகுமாரி!'. அந்த வாய்ப்பை தந்தவர்,

ஏ.எஸ்.சாமி 1946ல் படவுலகில் நுழைந்த கருணாநிதி மனோகரா, பராசக்தி, பூம்புகார் உள்ளிட்ட பல பிரமாண்ட படங்களுக்கு கூர்மையான வார்த்தை களால் வசனம் தீட்டி படம் பார்த்த வர்களை நெக்குருகச் செய்தார் சமீபகாலம் வரையிலும் அவர் சினிமா கதை வசனம் எழுதி வந்தார். மொத்தம், 50க்கும் மேற்பட்டகளுக்கு படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.






      Dinamalar
      Follow us