sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தைப்பூசம்: கைலாசநாதர் கோவிலில் தேரோட்டம் தொடக்கம்

/

தைப்பூசம்: கைலாசநாதர் கோவிலில் தேரோட்டம் தொடக்கம்

தைப்பூசம்: கைலாசநாதர் கோவிலில் தேரோட்டம் தொடக்கம்

தைப்பூசம்: கைலாசநாதர் கோவிலில் தேரோட்டம் தொடக்கம்


ADDED : ஜன 26, 2024 09:57 AM

Google News

ADDED : ஜன 26, 2024 09:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: கைலாசநாதர் கோவிலில், 3 நாள் தேரோட்டம் தொடங்கியது. முதல் நாளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தைப்பூசத்தையொட்டி சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் 3 நாள் தேரோட்டம் நேற்று தொடங்கியது. இதற்கு கடந்த, 17ல் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சோமாஸ்கந்தர், உமா மகேஸ்வரி சுவாமிகள் திருவீதி உலா நடந்தது. அதன், 9ம் நாளான நேற்று காலை, கைலாசநாதருக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மதியம், 12:00 மணிக்கு மேல், பெரிய தேரில் சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரி, சிறு தேரில் விநாயகர், வரதராஜ பெருமாள் சுவாமிகளை எழுந்தருளச்செய்தனர். 3:00 மணிக்கு மேல் தேர் நிலையத்தில் சுவாமிக்கு பூஜை செய்து, அங்கிருந்த சிறு தேரை, பக்தர்கள் முதலில் இழுத்தனர். தொடர்ந்து சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரி அமர்ந்திருந்த பெரிய தேரை, திரளான பக்தர்கள், 'அரோகரா' கோஷம் முழங்க, வடம் பிடித்தனர். தொடர்ந்து இரு தேர்களையும் இழுத்து சென்றனர். அண்ணா சிலை பகுதியில் தேர்கள் நிலை நிறுத்தப்பட்டன. இதில் தக்கார் திருஞான சம்பந்தர், அறநிலைய துறை இணை அலுவலர் மங்கயர்கரசி, செயல் அலுவலர் புனிதராஜ், திருத்தேர் கமிட்டி உமாபதி குருசாமிகள், மக்கள் பங்கேற்றனர். தாரமங்கலம் போலீசார், ஓமலுார் தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று, 2ம் நாள் தேரோட்டம் நடக்கிறது.

அதேபோல் தாரமங்கலம் சக்தி மாரியம்மன் கோவிலில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறுவர்கள், 39 காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியே ஆட்டம் ஆடி, 'அரோகரா' கோஷம் முழங்க ஊர்வலமாக சென்றனர். இதில் முருகன், வள்ளி, தெய்வானையை தேரில் எழுந்தருளச்செய்து பக்தர்கள் இழுத்து சென்றனர். மேலும் கண்ணனுார் மாரியம்மன் கோவில் அருகே உள்ள முத்து குமார சுவாமி, பூக்கள் அலங்கராத்தில் காட்சியளித்தார்.

காவடி ஊர்வலம்

ஓமலுார் செவ்வாய் சந்தை அருகே உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள முருகன் சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம் நடந்து மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். அக்ரஹாரத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கருப்பூரில் உள்ள கந்தசாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காவடி ஊர்வலம் நடந்தது.

மகுடஞ்சாவடி சுப்ரமணியர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அங்குள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து காவடியை தோளில் சுமந்து ஆடியபடி பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியே சுப்ரமணியர் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

ஆத்துார், வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் மூலவருக்கு, 16 வகை அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, புஷ்பம், ராஜ அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார்.

அதேபோல் சேலம், அம்மாபேட்டை, குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத தண்டாயுதபாணி, ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்க சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அம்மாபேட்டை குமரகுரு சுப்ரமணியர் கோவிலில் தங்க கவச சாத்துபடியில் பூஜை நடந்தது. செவ்வாய்ப்பேட்டை சித்திரைச்சாவடி முருகன், ஏற்காடு ஆறுபடை முருகன், பேர்லண்ட்ஸ் முருகன், ஊத்துமலை சுப்ரமணியர், ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள்

வழிபட்டனர்.

ஜோதி தரிசனம்

ஆட்டையாம்பட்டி வேலநத்தம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், அங்குள்ள திருவருட்பிரகாச வள்ளலார் மடத்தில் நேற்று காலை, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணத்துடன், அன்னதான விழா தொடங்கியது. தொழிதிபர் சண்முகம், சண்முகசுந்தரம், உள்ளிட்ட சத்திய சங்க நிர்வாகிகள், மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை நிர்வாகி சிங்காரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

அதேபோல் ஆத்துார், கோட்டை வள்ளலார் சத்ய ஞான சபையில், 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us