sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை 48 காலனி பள்ளியை உயர்நிலையாக தரம் உயர்த்தவும்  முதல்வர், அமைச்சருக்கு வலியுறுத்தல்

/

சிவகங்கை 48 காலனி பள்ளியை உயர்நிலையாக தரம் உயர்த்தவும்  முதல்வர், அமைச்சருக்கு வலியுறுத்தல்

சிவகங்கை 48 காலனி பள்ளியை உயர்நிலையாக தரம் உயர்த்தவும்  முதல்வர், அமைச்சருக்கு வலியுறுத்தல்

சிவகங்கை 48 காலனி பள்ளியை உயர்நிலையாக தரம் உயர்த்தவும்  முதல்வர், அமைச்சருக்கு வலியுறுத்தல்


ADDED : செப் 22, 2025 03:35 AM

Google News

ADDED : செப் 22, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே 48 காலனி நகராட்சி நடுநிலை பள்ளியை, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சிவகங்கை அருகே 48 காலனியில் 1971 ல் நகராட்சி துவக்கப்பள்ளி துவக்கப்பட்டு, இப்பள்ளி 2004 ல் நடுநிலையாக தரம் உயர்த்தப்பட்டன. இங்கு வந்தவாசி, வல்லனி, அழகுமெய்ஞானபுரம், முத்துநகர், வள்ளி சந்திராநகர், 48 காலனி பகுதியை சேர்ந்த மாணவர்கள் 223 பேர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கின்றனர். தற்போது தலைமை ஆசிரியர் உட்பட 8 ஆசிரியர்கள் வரை இங்கு பணிபுரிகின்றனர்.

21 ஆண்டாக நடுநிலை பள்ளியாகவே இருந்துவரும் இப்பள்ளியை உயர்நிலையாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. இப்பள்ளியை உயர்நிலையாக தரம் உயர்த்த எட்டாம் வகுப்பில் 50 மாணவர்கள் வரை படிக்க வேண்டும். அதே போன்று ஆதிதிராவிடர் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வரமுடியாத வகையில் இயற்கை ரீதியான தடை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இப்பள்ளிக்கு 5 கி.மீ.,துாரத்தில் தான் பிற உயர்நிலை பள்ளிகள் இருக்க வேண்டும்.

இதற்கான பங்களிப்பு தொகை ரூ.1 லட்சத்தை ஆசிரியர், பெற்றோர், நகராட்சி சார்பில் அரசுக்கு வழங்கப்பட்டது. மேலும், ஜன., 20 ல் சிவகங்கையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வந்த முதல்வர் ஸ்டாலினிடம் இப்பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை வைத்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பனிடமும் கோரிக்கை அளித்து வருகின்றனர். இப்பள்ளியை தரம் உயர்த்தினால், இப்பகுதியை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் உயர்நிலை பள்ளி வகுப்பில் சேர வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தரம் உயர்த்த அரசு முன்வரலாம் இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது, இப்பள்ளியை உயர்நிலையாக தரம் உயர்த்த, இயற்கை தடை என்பதற்கு ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்குவதால், மாணவர்கள் சிவகங்கைக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. வந்தவாசி போன்ற பகுதியில் இருந்து பல கி.மீ., துாரம் நடந்து தான் பள்ளிக்கு செல்கின்றனர். எனவே மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்தி இப்பள்ளியை உயர்நிலையாக தரம் உயர்த்த அரசு முன்வரலாம் என்றார்.






      Dinamalar
      Follow us