ADDED : ஜன 19, 2024 04:50 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகேயுள்ள புதுாரை சேர்ந்தவர் குருசாமி மனைவி சிவகாமி 28. குருசாமி சென்னையில் ேஹாட்டலில் பணி புரிகிறார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆன நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மகள் தற்கொலை செய்துகொண்டார். இரண்டாவது மகன் சந்தோஷ் ஒரு வருடத்திற்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார். மகனும் மகளும் இறந்ததால் சிவகாமிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு ஒக்கூர் புதுாரில் உள்ள வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டார். சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது.
சிவகாமியை கண்டுபிடிக்கப்பட்டு மகன் முத்துராஜாவிடம் போலீசார் ஒப்படைத்தனர். நேற்று காலை சிவகாமி வீட்டில் துாக்கிட்டு இறந்தார். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.

