/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.200 கோடி மோசடி நிறுவன தலைவர் கைது
/
ரூ.200 கோடி மோசடி நிறுவன தலைவர் கைது
ADDED : பிப் 25, 2024 01:55 AM

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மகிழ்ச்சி என்ற நிதி நிறுவனத்தில் டிபாசிட் செய்தால் கூடுதல் வட்டி தரப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
நம்பிய சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், 200 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர்.
கடந்த ஆண்டு திடீரென நிதி நிறுவனத்தினர் தலைமறைவாகினர். பாதிக்கப்பட்டவர்கள் புகார்படி, சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிதி நிறுவன இயக்குனர்கள், பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிறுவன தலைவரான, ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி சிவக்குமார், 46, என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ஸ்ரீராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர்.

