sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருக்கோஷ்டியூரில் இன்று மஹோத்ஸவம் துவக்கம்: ஜன.27ல் திருக்கல்யாணம்

/

திருக்கோஷ்டியூரில் இன்று மஹோத்ஸவம் துவக்கம்: ஜன.27ல் திருக்கல்யாணம்

திருக்கோஷ்டியூரில் இன்று மஹோத்ஸவம் துவக்கம்: ஜன.27ல் திருக்கல்யாணம்

திருக்கோஷ்டியூரில் இன்று மஹோத்ஸவம் துவக்கம்: ஜன.27ல் திருக்கல்யாணம்


ADDED : ஜன 23, 2024 04:42 AM

Google News

ADDED : ஜன 23, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜன.27ல் திருக்கல்யாணம்

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் இன்று தைலக்காப்பு திருக்கல்யாண மகோத்ஸம் இன்று துவங்குகிறது. ஜன.27ல் பெருமாள் -- --கோதை நாச்சியார் திருக்கல்யாணம் நடைபெறும்.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தை மாதம் பெருமாள் கோதை நாச்சியார் தைலக்காப்பு திருக்கல்யாண மகோத்ஸவம் 5 நாட்கள் நடைபெறும்.

இன்று மாலை 4:40 மணிக்கு ஆண்டாள் நாச்சியார் பெரிய சன்னதிக்கு எழுந்தருளுவார். இரவு 7:30 மணிக்கு பெரிய பெருமாளிடம் பிரியாவிடை திருப்பாவை வியாக்யானம் நடைபெறும்.

நாளை காலை 8:00 மணிக்கு ஆண்டாள் தலைக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், காலை 9:00 மணிக்கு தைலம் திருவீதி வலம் வருதலும், காலை 10:00 மணிக்கு தைலம் சாத்துதலும், காலை 11:00 மணிக்கு நவகலச அலங்கார ஸெளரித் திருமஞ்சனமும் நடைபெறும். இரவில் திருவீதி புறப்பாடும் நடைபெறும்.

தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் காலையில் ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், ஜன.27ல் மாலையில் பெருமாள், ஆண்டாள் ஊஞ்சலில் மாலை மாற்றுதலும், இரவில் திருக்கல்யாண மகோத்ஸவமும் நடைபெறும்.






      Dinamalar
      Follow us