/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம்
/
முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம்
ADDED : ஜன 23, 2024 04:41 AM

காளையார்கோவில்: காளையார்கோவில் கஸ்துாரிபாய் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷக ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
ஜன.19 அதிகாலை 5:15 மணிக்கு கணபதி ேஹாமம், கோபூஜையுடன் கும்பாபிேஷக பூஜை தொடங்கின. தொடர்ந்து தனபூஜை, மகாலட்சுமி பூஜை, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.
ஜன.,21 அன்று ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும், நேற்று காலை 7:50 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிேஷக பூஜைகள் தொடங்கின. மகாபூர்ணாகுதி, பிரதான கும்பம் ஆலயம் வருதல், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை 9:35 முதல் 10:25 மணிக்குள்சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தனர். மாலை 4:00 மணிக்கு மகா அபிேஷகம், அலங்காரம், சிறப்பு பூஜையும், இரவு 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

