/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதுவயல் சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று
/
புதுவயல் சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று
ADDED : ஜன 14, 2024 05:06 AM

காரைக்குடி : புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இங்கு 2022ம் ஆண்டு ஜூனில் மாநில சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து 2023 ஆக.,ல் தேசிய தரச் சான்று குழுவினர் சுகாதார நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள், கட்டமைப்பு, மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் செயல்பாடு, மருத்துவ பதிவேடு பராமரிப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 86.9 சதவீத மதிப்பெண்ணுடன் தேசிய தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது.
புதுவயல் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயச்சந்திரன் வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தராஜ் பாராட்டினர்.

