sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

போதிய மழை இல்லை: விவசாயிகள் சோகம்

/

போதிய மழை இல்லை: விவசாயிகள் சோகம்

போதிய மழை இல்லை: விவசாயிகள் சோகம்

போதிய மழை இல்லை: விவசாயிகள் சோகம்


ADDED : ஜன 19, 2024 04:57 AM

Google News

ADDED : ஜன 19, 2024 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில், கண்மாய் மற்றும் போர்வெல் மூலமே விவசாயப் பணி நடைபெறுகிறது. கடந்த ஆடியில் விவசாயிகள் உழவுப் பணி மேற்கொண்டனர். தொடர்ந்து, ஆடிப்பட்டத்தில், நெல் விதைப்பு பணி நடந்தது.

உழவு, உரம், விதை என ஏக்கருக்கு விவசாயிகள் ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்துள்ளனர்.

போதிய மழை இல்லாத நிலையில், போர்வெல் உள்ள விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். களத்துார், நாட்டுச்சேரி, ஜெயங்கொண்டான், பெரிய கொட்டகுடி மித்ராவயல், பெரிய கோட்டை உட்பட பல பகுதிகளிலும் மழையில்லாததாலும், கண்மாயில் தண்ணீர் இல்லாததாலும் பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாயி பாலமுருகன் கூறுகையில்: கடந்த ஆடி மாதம் நெல் விதைப்பில் ஈடுபட்டோம். தொடர்ந்து உழவு உரம் என ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவழித்துள்ளோம்.

டீலக்ஸ் மற்றும் சி.எஸ்.ஆர்., நெல் சாகுபடி செய்துள்ளோம். தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இப்பகுதியில் மழையே இல்லை. கண்மாய்கள் வறண்டு கிடக்கிறது. நெற்பயிர்கள் பரிந்து வரும் நிலையில், தண்ணீர் கிடைக்காமல் கண்ணீர் சிந்தி வருகிறோம் என்றார்.






      Dinamalar
      Follow us